கேள்வி:
முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங் கண்டுகொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாக கருதுவது ஏன்?
பதில்:
முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிககப்பட்டால்தான், இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்பமாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நரபலியிடுதல், ஜோதிடம் பார்த்தல், விதவை விவாகம் மறுத்தல், பெண் சிசுக்களைக் கொல்லுதல், தீண்டாமையைக் கடைப்பிடித்தல், போன்ற எல்லா விதமான பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்லாம் வளர்ந்து விடக்கூடாது என்ற ஓரே நோக்கம் தான்.
தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் முஸ்லிகள் பகைவர்களாகக் கருதுகிறார்கள் என்பதும் தவறாகும். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துத்துவா சக்கதிகளையும் இந்து மத சகோதரர்களை வேறுபடுத்தித்தான் பார்க்கிறார்கள் இந்துத்துவ சிந்தனை இல்லாத மேல் ஜாதி இந்துக்களையே முஸ்லிம்கள் எதிரிகளாகக் கருதாத போது தங்களைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களை பகைவர்களாகக் கருத மாட்டார்கள். ஆயினும் சங்கபரிவாரத்தினரின் சதியின் காரணமாக ஒரு சில பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகைமை இருக்கிறது. இத்தகைய மோதல்கள் குறைவான அளவே உள்ளன என்றாலும் இத்தகைய நிலைமை தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு பெரிய தடையாக உள்ளது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும் தங்கள் சுமூகமான நடவடிக்கை மூலம் இத்தகைய எண்ணத்தை நீக்க பாடுபட வேண்டும்.